அவிநாசி, ஆக. 5- கீழடி, கொடுமணல் போன்று கொங்கு மண்டலத்தில் 300 ஊர்கள் உள்ளன என தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி தமிழ் துறை சார்பில் திங்கட் கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் ஆய்வா ளர் பல்லடம் பொன்னுசாமி கூறினார். சிந்துவெளிப் பண்பாடு நூற்றாண்டை முன்னிட்டு அவிநாசி அரசு கலைக்கல்லூரி யில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில், தமுஎகச அவிநாசி நிர் வாகி க.பரமேஸ்வரி வரவேற்றார். இதை தொடர்ந்து தமுஎகச அவிநாசி கிளை நிர்வாகி சம்பத் குமார் அறிமுக உரையாற்றினார். இதில் தமிழ்த்துறைத் பேராசிரியர் போ.மணி வண்ணன், வயநாடு இரங்கற்பா தலைப்பில் உரையாற்றினார், தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த பயிலரங்கத்தின் முதல் அமர்வில் தொல்லியல் அடிப்படையில் வரலாற்றுச் சின் னங்களை கண்டறிவோம் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் பல்லடம் பொன்னு சாமி பேசுகையில், கீழடி கொடுமணல் போன்று நமது கொங்கு மண்டலத்தில் பண் டைய தொல்லியல் கூறுகள் உள்ள சுமார் 300 ஊர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அரண்ம னைபுதூர் - முதுமக்கள் தாழி திருமுருகன் பூண்டி - பானை ஓடுகள், கணி யாம் பூண்டி - பெருங்கற்காலச் சின்னங்கள், புலிப்பார்பாளையம் - பெருங்கற்காலச் சின் னங்கள். இதுபோன்று பல ஊர்கள் கொங் குநாட்டில் உள்ளன. தொல்லியல் எச்சங்களான பண்டைய மக்களின் புதைவிடப் பகுதிகளில் பல நெடு நிலை நடுகல், கல்வட்டங்கள், கல்திட்டை, கல்பதுக்கை முதலான கூறுகள் கண்டறியப் பட்டுள்ளன. பண்டைய மக்களின் வாழ்விடப் பகுதிகளான சாம்பல் காடு, பூதிமேடு, திருநீர் மேடு, சாம்பல் மேடு, போன்ற பகுதிகள் கண்ட றியப்பட்டு, அங்கு மேற்பரப்பு ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளன. பாறை ஓவியங் கள் உடுமலைப் பகுதிகளில் புதிதாக கண்டறி யப்பட்டுள்ளன என்றார். இதனைத் தொடர்ந்து கொங்கு நடுகற்கள் என்ற தலைப்பில் முனை வர் ச.மு.ரமேஷ் குமார், காலம் நடந்த பெரு வழி என்ற தலைப்பில் சூழலியலாளர் தமுஎ கச, மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசி வம் ஆகியோர் பேசினர். இரண்டாவது அமர்வில் பாரதி சுப்பரா யன் வாழ்த்தி பேசினார், இதில் விஜய் சுதாகர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார். தமுஎகச கொ.ரகு நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.