districts

சொத்துக்காக மனைவி கொலை: கணவர் உட்பட 3 பேர் கைது

ஈரோடு, டிச.13- கோபிசெட்டிபாளையம் அருகே சொத்துக்காக மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் அவரது பெற் றோர் ஆகிய 3 பேரை காவல் துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பூமாண்ட கவுண்டனூ ரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி (63). இவரது மனைவி தம யந்தி. இவர்களுக்கு பூரணி (28) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ள னர். கவுந்தப்பாடியை அடுத்த சின்னி யம்பாளையத்தைச் சேர்ந்தவர் யுவ ராஜ் (53). இவரது மனைவி பூங்கொடி (51). இவர்களின் மகன் மதன்குமார் (29). இந்நிலையில், பூரணி கல்லூரி யில் படிக்கும் போது மதன்குமாரு டன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த னர். தொடர்ந்து கடந்த 2021 ஆம்  ஆண்டு பூரணியும், மதன்குமாரும்  வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெங் களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதற்கி டையில் பூரணியிடம் அவரது பெற் றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பூரணியை பிரசவத்திற்காக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப் போது குழந்தை மற்றும் பூரணியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர்  வந்தனர். அப்போது பூரணியை  பார்க்கக்கூடாது என்று மதன்குமா ரும், அவரது தாயார் பூங்கொடியும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரி கிறது. இதற்கிடையில் சின்னியம் பாளையத்தில் உள்ள பூரணியின் பக் கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த் திக்கு போன் செய்து பூரணிக்கு திடீ ரென்று உடல்நிலை சரியில்லை. அத னால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது. கவுந்தப்பாடி அரசு மருத்துவம னைக்கு பூரணியை கொண்டு சென்று அங்கு பரிசோதித்த உடன் அங்கி ருந்து அதே ஆம்புலன்சில் கோபி -  சத்தி சாலையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு கொண்டு சென்றதாக வும், அங்கிருந்து கோபி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பூரணி இறந்து  விட்டதாக தெரிவித்தனர். இதுகு றித்து தனது மகளின் இறப்பில் சந்தே கம் உள்ளது என்று கவுந்தப்பாடி போலீசில் பூரணியின் தந்தை கிருஷ் ணமூர்த்தி புகாரளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து கோபி வருவாய்  கோட்டாட்சியர் பிரிய ்தர்சினி தலை மையில் விசாரணை நடந்தது. இதன் பின் பூரணி உடல் பிரேத பரிசோ தனை பெருந்துறையில் உள்ள மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. பிரேத பரிசோதனை முடி வில் பூரணி கழுத்தை நெரித்து  கொலை செய்யப்பட்டது தெரியவந் தது. இதையடுத்து மதன்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவா னார். இதுகுறித்து பூரணியின் பெற் றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு வந்து தலைமறைவாக இருக்கும் மதன் குமார் மற்றும் அவரது குடும்பத்தி னர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சொத்துக்காக மனைவியை கொலை செய்து மதன்குமார் மற்றும் அவரது  பெற்றோர் நாடகமாடியது தெரியவந் துள்ளது. இந்நிலையில், கோபியை அடுத்த ஒத்தக்குதிரை பகுதிகளில் பதுங்கி இருந்த பூரணியின் கணவர்  மதன்குமார், மாமனார் யுவராஜ், மாமி யார் பூங்கொடி ஆகியோரை கவுந் தப்பாடி போலீசார் கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் கோபி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பின் மதன்குமார் மற்றும் யுவராஜ்  ஆகியோர் கோபிசெட்டிபாளையத் தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக் கப்பட்டனர். பூங்கொடி கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.