காய்ச்சலுக்கு 25 பேர் அனுமதி
கோவை, டிச.4- கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச் சலுக்காக 25 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள் ளாகி வருகின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதால் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படு கிறது. வைரஸ் கிருமியாலும், கொசு உற்பத்தி அதிகரிப்ப தாலும் மலேரியா, டெங்கு போன்றவை தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். இதுவரை யாருக்கும் பெரியளவில் பாதிப்பு இல்லை. டெங்குவுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 20 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று சூழ்நிலைகளில் குழந்தைகள், முதிய வர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பு சுடுதண்ணீரில் வாய் கொப்பளித் தால், பெரும்பாலான தொண்டை பிரச்சனைகளை தவிர்க்க லாம். பள்ளி குழந்தைகள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். ஐஸ், குளிர்பானங்கள், குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதால், காய்ச்சலில் இருந்து பாது காத்து கொள்ளலாம், இவ்வாறு கூறினார்.
போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் மோதல்
திருப்பூர், டிச.4- திருப்பூர் மாவட்டம், தாரபுரத்தில் இருந்து காங்கயம் வந்த அரசு பேருந்தில் போலீசாருக்கும் பாஜகவின் நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருத ரப்பினரும் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளனர். இதனையறிந்த காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, பாஜக மாவட்ட செயலாளர் ராஜ் என்பவர், பணியில் இருந்த ரமேஷ் என்கிற போலீசாரை ஒருமையில் பேசியுள்ளார். மேலும், சட்டையை கழட்டிக்கொண்டு ஒத்தைக்கு ஒத்தை வா மோதி பார்க்கலாம் என பேசியுள்ளார். இவருடன் இதர பாஜக நிர்வா கிகளும் உடனிருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது, சமூகவலைத்தளத்தில் ்வேகமாக பரவி வருகிறது.
காட்டு யானை தாக்கி பெண் பலி
உதகை, டிச.4- கூடலூர் பாடந்துறை கிராமம் புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி கல்யாணி என்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து காட்டு யானை தாக்கி மனித உயிரிழப்புகள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப் பகுதியை கொண்டுள்ளதால், இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகளும் அதிக அளவில் வசித்து வருகின்றன. பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் தாலுகா தேவாலா வாளவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (56) என்பவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தால் தேவாலா பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். இந்நிலையில், மீண்டும் கூடலூர் பாடந்துறை கிராமத்தில் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிக்க சென்ற கல்யாணி (56) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தி லேயே பலியானார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பெண்ணை தாக்கி கொன்றது ஏற்கனவே தேடப்பட்டு வரும் பிஎம் 2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து வனவிலங்குகள் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படுவது நீலகிரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி எந்திரம்
உதகை, டிச.4- நீலகிரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உதகை மார்க்கெட்டில் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மஞ்சப்பை விநியோகிக்கும் எந்தி ரத்தின் இதன் செயல்பாட்டை உதகை மாவட்ட ஆட்சியர் அம்ரித் முன்னி லையில் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நக ராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனை செல்வன் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் 20 இடங் களில் மஞ்சப்பை விநியோகிக்கும் நிலையில், முதல் எந்திரம் உதகையில் உள்ள உழவர் சந்தையில் நிறுவப் பட்டது. தற்போது மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்தி ரத்தில் ரூ.10 மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஒரு பைக்கு ரூ.14 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ரூ.10க்கு விற்பனை செய் கிறோம். மாவட்ட அளவில் பைகள் விற் பனை செய்யப்படுவதால், பையின் விலை கூடுதலாக உள்ளது. தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பை கள் தயாரித்து விற்பனை செய்யும் போது விலை குறையும், என்றார்.