districts

img

ரூ.8.20 கோடி மதிப்பில் 2000 கிலோ பன்னீர் தயாரிக்கும் கூடம்

கோவை, நவ.3-  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனத் தில் ரூ.8.20 கோடி மதிப்பில் 2000 கிலோ கிராம் பன்னீர் தயா ரிக்கும் கூடம் நிறுவப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் 690 பால் விற்பனை முகவர்கள், 35 மொத்த விற்பனையாளர்கள் மூலம் தினந்தோறும் சுமார் 2,00,622 லிட்டர் பால் மற்றும் 262 கோடி மதிப்பில் பால்பொருட் கள் விற்பனை செய்யப்படுகின்றது. 2 லட்சம் லிட்டர் முதல்  210 லட்சம் லிட்டர் வரை பாலை பாக்கெட் செய்து விற்பனை  செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு 15000 லிட்டர் பாலும், திருப்பூர் மாவட்டத்திற்கு 35000 லிட்டர் பாலும் விற் பனை செய்யப்படுகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட் டத்தில் 5000 லிட்டர் தயிர் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, 500 பாட்டில் நறுமணபால், பாதாம்பவுடர் 50 கிலோ. 200 கிலோ  பால்கோவா, 5 டன் நெய் விற்பனை பிரிவுக்கு அனுப்பப்படு கிறது.

மேலும், 15 டன் முதல் 20 டன் நெய்யும், 10 ஆயிரம் லிட்டர் நறுமண பாலும் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. முன்னதாக, கோவை பச்சாப்பாளைத்தில் உள்ள கோயம் புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யம் லிமிடெட் நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டு ஆய்வகம், பால் குளிரூட்டும் அறை, கருவிகள் கட்டுப்பாட்டு அறை ஆகிய வற்றை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண் டார். இதில், பாதுகாப்பான முறையில் பால் உற்பத்தி செய்யப் படுவது குறித்தும், பாலை பதப்படுத்தி பாதுகாப்பாகவும், சுகா தாரமான முறையிலும், பால் விற்பனை செய்யப்படுவது குறித் தும், அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, முழுதானி யங்கி முறையில் ஒருநாளைக்கு ரூ.8.20 கோடி மதிப்பில்  2000 கிலோ கிராம் பன்னீர் தயாரிக்கும் கூடம் நிறுவப்பட்டு வரு வதையும் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப் பில் தெரிவித்துள்ளதாவது, கூட்டுறவு சங்கங்களில் பால் உற் பத்தியாளர்கள் நலன்கருதியும், தரமான பால் உற்பத்தி  செய்திடும் பொருட்டும், கால்நடை தீவனங்கள் மானிய விலை யில் வழங்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக 300 மெட்ரிக் டன் கால்நடைதீவனம் பால் உற்பத்தி யாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின் றது. உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் மாவட்டம் தங்கு தடையின்றி அனைத்து நேரங்களில் பால் விநியோகம் செய் யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.