districts

img

சிவப்பு சட்டை அணியும் முதல்வர் தந்த பரிசா 12 மணி நேரம் வேலை?

தர்மா, பனியன் தொழிலாளி

வேலை நேர வரைமுறையை தளர்த்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் திருப் பூரில் பெரும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக புலம்பெயர்ந்து வரக்கூடிய தொழிலாளர் களை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய தயாராக இருப்பதாக சொல்லி வரைமுறை இல்லாமல் வேலை  வாங்குவார்கள். இங்கிருக்கும் உள்ளூர் தொழிலாளர்கள் சட்டப்படி 8 மணி நேரம் தான் வேலை செய்வோம் என்று சொன்னால் முதலாளிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். எங்களுக்கு வேலை தர மறுப்பார் கள். எனவே தமிழக அரசின் இந்த சட்ட திருத் தம் தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்பை  ஏற்படுத்தும். இந்த சட்ட திருத்தத்தை எக் காரணம் கொண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது.

ஈஸ்வரமூர்த்தி, பனியன் தொழிலாளி

இப்போது நடைமுறையில் இருக்கும் வேலை நேர சட்டத்தையே முதலாளிகள் மதிப்பதில்லை. இந்த நிலையில் வரைமுறை இல்லாமல் வேலை வாங்கும் சட்டத்தை கொண்டு வந்தால் தொழிலாளர்கள் உரி மைகள் மேலும் பறிக்கப்படும். வெளிநாட் டுக்கு ஆர்டர்களை அனுப்ப வேண்டும், எனவே குறிப்பிட்ட நேரத்தில் அனுப்புவ தற்கு இந்த சட்டம் தேவை என்று முதலாளி கள் சொல்கிறார்கள். தங்கள் தேவைக்கு ஏற்ற சட்டங்களைப் பற்றி பேசும் முதலாளிகள், தொழிலாளர் நல சட்டங்களை பற்றி அக் கறைப்படுவதில்லை. காலத்திற்கு ஏற்ப சட் டங்களை மாற்றுவதாக சொல்வோர், 8.33% போனஸ் சட்டத்தை மட்டும் மாற்றாமல் இருப் பது ஏன்? வெளிநாடுகளில் தொழிலாளர் நலன்களை பாதுகாக்க எத்தனையோ சட் டங்கள் உள்ளன. அவற்றையும் இங்கே அமல் படுத்தலாமே? கேண்டீன் வசதி, இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகிய வற்றை முழுமையாக அமல்படுத்த மாட்டார் கள். ஒரு கம்பெனியில் 500 பேர் வேலை செய் தால் அதில் 25 சதவீதம் மட்டுமே ஷிப்ட் அடிப் படையில் வேலை செய்யக்கூடிய தொழிலா ளர்களாக இருக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்பவராக உள்ளனர். வெளிநாட்டு முத லாளிகள் வர்த்தகர்கள் கேட்பார்கள் என்பதற் காக மட்டும்தான் இங்குள்ள சட்டத்தை அமல்படுத்துவதாக காட்டிக் கொள்வதற்கு சில சலுகைகளை செய்கின்றனர். இவர்க ளுக்கு தொழிலாளர்கள் மீது உண்மையான அக்கறை இல்லை. முதலாளிகளுக்கு சாதக மான சட்டம் என்றால் அதை அமல்படுத்து வதற்கு உடனே நடவடிக்கை எடுப்பார்கள். எனவே தமிழக அரசின் இந்த சட்ட திருத் தம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பால்ராஜ், பனியன் தொழிலாளி 

எட்டு மணி நேரம் வேலை என்ற சட்டம்  இருக்கும்போதே கூடுதல் நேரம் வேலை வாங்குகிறார்கள். இப்போது சட்டத்தை திருத்தி 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்றால் முதலாளிகள் வரைமுறை இல்லா மல் கூடுதல் வேலை வாங்குவார்கள். இந்த சட்டத்தை அனைத்து தொழிலாளர்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வீட்டில் சமையல் செய்து குழந்தைகளை பார்த்துக் கொண்டு கம்பெனியிலும் வேலை செய்வது  கட்டாய தேவைக்காகத்தான். 12 மணி நேரம்  என்றால் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடை யாது, விருப்பத்தின் பேரில் செய்யலாம் என்று  இப்போது சொன்னாலும், நடைமுறையில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை  வாங்கும் நிலை தான் ஏற்படும். இந்த சட் டத்தை கட்டாயம் தமிழ்நாடு அரசு வாபஸ் வாங் கிய தீர வேண்டும். இல்லாவிட்டால் தொழி லாளர்களை திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம்.

கே.மணியன், பனியன் தொழிலாளி

ஓட்டுப் போட்ட மக்கள் தலையில் ஓட்டை உடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? லட்சோப லட்சம் உயிர் தியாகத்தினால் உரு வானது 8 மணி நேர வேலை. வருடந்தோறும் மே தின நன்னாளில் தமிழக முதல்வர் சிவப்பு சட்டை அணிந்து, மே தினத்தை பதிவு செய் கிறார். இந்த ஆண்டு தொழிலாளிக்கெல்லாம் தமிழக முதல்வர் கொடுத்த பரிசு எட்டு மணி நேரத்தை 12 மணி நேரம் ஆக்கியது தான்.  சராசரியாக வாழ்க்கை நடத்த, தினசரி 800  ரூபாய் தேவைப்படுகிறது. 8 மணி நேரம்  மற் றும் கூடுதலாக வேலை செய்தால் ஒன்றரை ஷிப்ட் கணக்கு வரும். இதில் தான் எனது  மூன்று குழந்தைகள் உடன் வாழ்கை சென்று கொண்டிருக்கிறது. 12 மணி நேரம் வேலை என்றால் எப்படி வாழ்க்கை நடத்துவது? இந்த கொடூரமான தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

ஆர்.நாகராஜன், பனியன் தொழிலாளி

8 மணி நேர வேலை 12 மணி நேரமாக் கியது, முதலாளிகளுக்கு சாதகமாக மாறி உள்ளது. தொழிலாளிகளுக்கு மிக மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக வேலைக்கு ஏற்ப ஊதி யம் கிடைக்கும். தற்பொழுது அது முற்றிலும் மறுக்கப்படும். முன்பு குடும்ப விசேஷம் இருந் தால் குறுகிய நேரம் வேலை செய்துவிட்டு சம்ப ளம் இன்றைய தினம் கிடைக்கும் என்று மன நிம்மதியுடன் விசேஷ காரியங்களுக்கு செல் வோம். ஆனால், தற்பொழுது அது முற்றிலும் மறுக்கப்படும். இந்த சட்டம் இயற்றிய காரண மாக, முதலாளிகள் விரைவில் ஆர்டர்கள் முடித்துக் கொடுக்க நேரிடும். பெரும் லாபம் முதலாளிக்கும், தொழிலாளிக்கு கேள்விக் குறி மட்டுமே உண்டாக்கும், இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

கருப்புசாமி, பனியன் தொழிலாளி

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் தொழி லாளிகள் மிகவும் பாதிப்படைவார்கள். கோடான கோடி தொழிலாளிகள் முழக்கத்தா லும், ரத்தத்தாலும் கிடைத்த 8 மணி நேர  வேலை உரிமையை, ஒரே நாளில் சட்ட திருத் தம் செய்து தொழிலாளிகள் கண்களில் ரத் தத்தை வரவழைத்துள்ளனர். இந்த 12 மணி நேரம் சட்டம் இயற்றியது தொழிலாளிகளை வறுமையில் தள்ளக்கூடிய நிலைக்கு சென்று விடும். வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக் கும் இந்த கொடூர சட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெறுவதே நல்லது.

மே தினத்தின் சாரம்சத்தையே அழிக்கும் சட்டமிது!

அ.முத்துபாண்டி

8 மணி நேரம் வேலை, 8 மணி நேர உறக் கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற அடிப்படை யில் உலகம் இயங்கிக் கொண்டிருந்த சூழ லில், தமிழக அரசின் இந்த  அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே 8  மணி நேர வேலைக்கு பதிலாக, 12 மணி நேரம் வேலை செய்து கொண்டுள்ளார்கள். இப்படி இருக்கையில் 12 மணி நேரம் வேலை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அது இன் னும் எவ்வளவு கூடுதலான வேலைகளை செய்வார்கள் என்பதை எண்ணிப் பார்க் கவே அச்சமாக உள்ளது!

கே.மோகன், சுமைப்பணி தொழிலாளி

இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொழிலாளர் நல சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் இன்னும் அத்தக்கூலியாக, எவ்வித பாதுகாப்பும் இல் லாத நிலையிலே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் தமிழக அரசின் அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. இந்த மசோதா முழுக்க முழுக்க ஏழை, எளிய, தொழிலாளர் மக்களை வஞ்சிக்கக் கூடிய சட்டமாகும். மீரா ஏற்கனவே பெண்கள், தொழிற்சாலை கள், கார்மென்ட்ஸ், கடைகள், தனியார்  நிறுவனங்களில் 10, 12, 15 மணி நேரத்திற்கும்  மேல் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நி லையில் தமிழ்நாட அரசு 12 மணி நேர வேலை மசோதா பெண்களை கொத்தடிமையாக மாற்றும் சூழ்நிலை வரும். எனவே, இம் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.  சிவகுமார், விசைத்தறி தொழிலாளி 8 மணி நேரம் என சட்டம் இருக்கும் போதே விசைத்தறி தொழிலில் ஏற்கனவே 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டுள்ளனர். இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் வேலை நேரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

அம்மணியம்மாள்

தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத் தால் 8 மணி நேர வேலையை 12 மணி நேர மாக சட்டம் போடுவீர்களா! அதை எந்த வகை யிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. உடனடி யாக அதை திரும்பப் பெற வேண்டும். சொன் னதைச் செய்வோம் என்றார் கலைஞர். சொல் லாததையும் செய்வோம் என்றார் ஸ்டாலின். ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றார்  நமது முதலமைச்சர்.  அதன் பொருள் 8 மணி  நேர வேலையை 12 ஆக மாற்றுவது தானா முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே!

கே.குமார், விசைத்தறி தொழிலாளி

மே 1 தொழிலாளர் தினத்தை மிக உற்சா கமாகவும், சிறப்பாகவும் கொண்டாட கூடிய நாடாக இந்தியா உள்ளது. அதிலும் குறிப் பாக தமிழகத்தில் மே 1 ஆம் தேதியன்று தொழிலாளர்கள் உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகளில் பங்கேற்பர். மே தினத்தின் முக் கிய சாராம்சமே 8 மணி நேர வேலை, 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு என்பதே  ஆகும். ஆனால், தமிழக அரசின் இந்த அறி விப்பானது முற்றிலும் முரண்பாடாக. கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான முறை யில் உள்ளது.