ராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, பேரூராட்சி தலைவர் சுமதி, பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபி ராஜா உட்பட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.