108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொறுப்பாளர் ஆர்.ஜி.வேதராஜ் கலந்து கொண்டார். ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை நடத்தி வரும் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.