கிருஷ்ணகிரி, ஏப். 9- ஓசூர் மாநகராட்சியில் பொது நல சமூக கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று புத்தகத் திருவிழா அமைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஓசூர் புத்தகத் திருவிழாவின் 11 வது ஆண்டு புத்தகத் திருவிழா அமைப்புக் குழ கூட்டம் முனைவர் சேது ராமன் தலைமையில் நடைபெற்றது. கடந்த 10 புத்தகத் திருவிழாக்கள், அதன் சிறப்பம்சங்கள், அறிவியல் இயக்கத்தின் பங்கு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி பேசினார். மாநில செயற்குழு உறுப்பி னர் சிவகுமார் தொகுப்பு ரரை வழங்கினார். கூட்டத்தில் 11 வது ஓசூர் புத்தகத் திருவிழாவை ஜூலை 8 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இந்த புத்தக திருவிழா குறித்து மாணவர்கள், ஆர்வலர்க ளை ஈர்க்கும் வகையில் 2000 மாணவர்களுக்கு தபால் அட்டைகள் வழங்கு வது, வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்கும் வகையில் புத்தக சேமிப்பு திட்டத்தில் இணையும் நபர்களை கவுரப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கையொப்பமிட்ட சான்று வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சமூக நலன்சார்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சி களுக்கு பயன்படும் வகை யில் ஓசூர் மாநகராட்சி சார்பில் பொது நல சமூக கூடம் அமைத்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 ஆவது புத்தகத் திருவிழாவின் கவுரவத் தலைவராக பேராசிரியர் வணங்காமுடி, தலைவராக அறம் கிருஷ்ணன், ஒருங்கி ணைப் பாளராக முனைவர் சேதுராமன், செயலாளராக அரிச்சந்திரன், பொருளாள ராக கண்மணி உட்பட 16 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஏர் பைபர் கேபிள் உரி மையாளரும் 19 வது வார்டு உறுப்பினருமான சசிதேவ், தமுஎகச தலைவர் ஆடிட்டர் பாலசுந்தரம், தமிழக மக்கள் மேடை நிர்வாகி சந்திர சேகர், உட்பட கலந்து கொண்டனர்.