கிருஷ்ணகிரி,பிப் 11.- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவியருக்காக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும், பள்ளிக்கு வாங்கப்பட்ட கணினியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மாணவர்கள் சோக்கை விகிதத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் திம்பி, பெற்றோர், ஆசிரியர்கள் இதில் திரளாக பங்கேற்னர்.