districts

img

ஓசூரில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25- ஓசூரில் ஜூலை 8 ஆம் தேதி முதல் 12 நாட்கள் 11வது புத்தகத் திருவிழா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் nஜயச்சந்திரன் ரெட்டி தெரிவித்தார்.  ஓசூரில் புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர் விழி, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவி யாளர் கோபு, ஓசூர் வரு வாய் கோட்டாட்சியர் தேன்மொழி, ஓசூர் மாநக ராட்சி ஆணையர் பால சுப்பிரமணியம், மாவட்ட நூலக அலுவலர் தன லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் வணங்காமுடி, மாநில செயலாளர் சேதுராமன், பொருளாளர் கண்மணி, அறம் கிருஷ்ணன்,பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது:- சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் மாண வர்களும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் ஊக்கப்  படுத்த தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் முன்முயற்சியில் ஓசூரில் மிகப்பெரிய மக்கள் திருவிழாவாக இதுவரை 10 புத்தக கண்காட்சிகள் நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற விருக்கும் 11 ஆவது புத்தக கண்காட்சியை கிருஷ்ண கிரி மாவட்ட நிர்வாகம், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்துகிறது. இந்த புத்தக திருவிழா ஓசூர் ஹோட்டல் ஹில்ஸ் குளிர்சாதன கூட்டரங்கில் ஜூலை 8 முதல் 19 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற உள்ளன. நாள்தோறும் குழந்தைகளின் நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  இவ்வாறு அவர் தெரி வித்தார்.