கள்ளக்குறிச்சி, ஏப். 4- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூன்றாம் பாலினத்தவர் கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் வீட்டு மனைப் பட்டா போன்ற நலத்திட்டங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை. திருநங்கை அடை யாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.