districts

img

கள்ளக்குறிச்சி அருகே: மீன்பிடி திருவிழா

கள்ளக்குறிச்சி,ஜூலை 6- கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப் பணித்துறையினர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்ட னர். அந்த குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, மணிமுக்தா அணை யில் மீன் பிடி திருவிழா நடைபெற உள்ள தாக தொலைபேசி மற்றும் சமூக வலை தளம் மூலம் தகவல் பரவியது. அதன்படி, சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்க நாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டா லம், அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், அணையின் ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துக்கொண்டிருந்தனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் விதமாக அணையின் கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அணையில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5000 கிலோ மீன்களை பிடித்து சென்றனர். இந்த நிகழ்வு திருவிழா போல காட்சியளித்தது.