கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்கள்ளிப்பட்டு கிராமத்தில்மா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர் தொப்பை மனைவி ஜெயக்கொடி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று (ஏப்.1) நடைபெற்றது இதில் சிபிஎம் கிளை செயலாளர் சக்திவேல் தலைமையில், மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி,மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி,ஒன்றியகுழு உறுப்பினர்கள் பாஸ்கர்,செல்லமுத்து, வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் முரளி, விதொச ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன்,விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.