districts

பெண் வீட்டாரின் தாக்குதல், காவல்துறை அலட்சியத்தால் இளைஞரின் தாயார் தற்கொலை

கரூர், ஜூன் 22 - பெண் வீட்டாரின் தாக்குதல், அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தாயாரின் மரணத்துக்கு காரண மானவர்களை கைது செய்திட வேண்டும் என்றும், காதல் திருமணம் செய்து கொண்ட தங்க ளுக்கு  பாதுகாப்பு கேட்டும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் கோரியுள்ளனர். 

இதுகுறித்து காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ரா.ஹரிபிரசாத் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது:

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கருப்பண்ணன் மேட்டில் எனது (ஹரிபிரசாத்) தந்தை ராசு. அம்மா மல்லிகா ஆகி யோருடன் வாழ்ந்து வருகின்றேன். நான் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறேன். எங்க ளது ஊருக்கு அருகில் உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த  பழனிச் சாமி மகள் மனோரஞ்சனி (வயது 19). நாங்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்‌. எங்க ளது காதல் இரண்டு வீட்டாருக் கும் தெரியும். இதனைத் தொடர்ந்து எங்களது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து மனோரஞ்சனியின் பெற்றோர் வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். 

திருப்பூர்  காவல்நிலையத்தில் தஞ்சம்

இதன் காரணமாக வேறு வழியின்றி நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூ ருக்கு சென்று கடந்த 2.6.2024 அன்று வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள விநாயகர் கோவிலில் எங்களது நண்பர்கள் முன்னி லையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண் டோம். பின்னர் எங்களது பாது காப்பு கருதி 5.6.2024 அன்று  திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந் தோம். இதனை தொடர்ந்து மனோரஞ்சனியின் குடும்பத்தி னரை விசாரணைக்கு அழைத்து எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக் கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். 

குடும்பத்தினர் மீது தாக்குதல், அச்சுறுத்தல்

இந்நிலையில் கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி கவுன்சிலர் வசந்தியின் கணவர் செல்வம், அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் மனோரஞ்சனியின் குடும்பத்தினரை தூண்டி விட்டு, எனது தாயார் மல்லிகாவையும், எனது குடும்பத்தார் மீது தாக்கு தல் நடத்தி அச்சுறுத்தி, ஆபாச வார்த்தைகளால் பேசி மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளனர்.

குளித்தலை காவல் நிலையம் அலட்சியம்

மேலும் செல்வம், ரமேஷ்  இரு வரும் எனது தாயார் மல்லிகாவி டம் வீடு தேடி வந்து நீ ஏன் உயி ரோடு இருக்கிறாய். நீ இறந்தால் தான் உன் மகன் இங்கு வரு வான் என்று அச்சுறுத்தி தற் கொலைக்கு தூண்டியுள்ளனர். இதன் விளைவாக எனது தாயார் 15.6.2024 அன்று தூக்கிட்டு இறந்து விட்டார். இது குறித்து எனது தாய் மாமன் பழனிச்சாமி குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்யாமல் குளித்தலை போலீசார் அலட்சி யமாக செயல்பட்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு 

இச்சம்பவம் நடப்பதற்கு முன்பே எனது தாயார் மல்லிகா தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு குளித்தலை காவல் நிலையத்தில் செல்வம் அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் மனோரஞ்சனி குடும்பத்தினர் மீதும் மூன்று முறை புகார் அளித்துள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்து பாதுகாப்பு கோரி இருந்தார்.

பாதுகாப்பு கிடைக்காததால் தாயார் தற்கொலை

ஆனால் குளித்தலை போலீ சார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காததாலும் உரிய பாதுகாப்பு கிடைக்காத தாலுமே தற்கொலை செய்து கொள்ள துணிந்துள்ளார். இதற்கு குளித்தலை காவல் நிலையத்தாரின் முன்னெச்ச ரிக்கையின்மையே காரணமாகும். எவ்வித பாதுகாப்பும் கிடைக்காத நிலையில் எனது தாயார் தனது உயிரைப் போக்கிக் கொண்டுள்ளார். 

எனது தாயாரின் இறப்புக்கு காரணமான செல்வம், ரமேஷ் மற்றும் குளித்தலை காவல் நிலை யத்தில் பதியப்பட்ட வழக்கிலுள்ள குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்திற்கு  ஹரிபிரசாத், மனோரஞ்சனி ஆகி யோருடன்   மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சென்று புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனை வர் பிரபாகரனிடம் வழங்கினர். கட்சியின் கரூர் மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் சங்கரநாராய ணன் மற்றும் உறவினர்கள் உடன் சென்றனர்.