கரூர், ஜூலை 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கடவூர் ஒன்றிய குழு உறுப்பினருமான பி.ராமமூர்த்தி கூறுகையில், கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், டி.ரெட்டியாப்பட்டியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகா தார நிலையம் 7.3.2023 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. ஒரு செவிலியரைக் கொண்டு செயல் பட்டு வரும் இந்த சுகாதார நிலையம், இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் பயன்ப டுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. மாவத்தூர் ஊராட்சிக்கு உட்பட ரெட்டியபட்டி, நாச்சிப்பட்டி, மாவத்தூர், கோடங்கிபட்டி, காமாட்சிபுரம், தேவனூர், பசுபதி பாளையம், முத்தகவுண்டம்பட்டி, அக்கரைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, காமாநாயக்கனூர், மசலூர், தேவனூர், கழுத்தரிக்கப்பட்டி, தாசிரெட்டிப்பட்டி, சின்னம்பட்டி, வினோபாஜிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த துணை சுகாதார நிலைய மருத்துவ மனையை நம்பித்தான் வாழ்ந்து வருகின்ற னர். பிரசவம், விஷக்கடி, விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு இந்த அரசு துணை சுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனை யில் கர்ப்பிணிகளுக்கு வாரத்தில் புதன்கிழமை தோறும் தடுப்பூசி செலுத்துகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதால், கட்டிடம் பழமையானதாக இருக்கிறது. மேலும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. கட்டிடத்தில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. மருத்து வமனைக்கு வரும் நோயாளிகள் இந்தக் கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடன் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளி கள், ஊழியர்கள் மீது கட்டிடம் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு, உடனடி யாக பழுதடைந்த கட்டிடத்தை சீர்செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நிர்வாக மும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம பகுதி மக்களை திரட்டி கடவூர் வட்டக் குழு சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும் என்றார்.