கரூர், நவ.21- கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம், வைகை நல் லூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு மைலாடியில் தார்ச்சாலை, மின் விளக்கு வசதி இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். இதுதொடர்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தெற்கு மைலாடி கிளைச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ‘‘தெற்கு மைலாடி யில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு நூற்றுக்க ணக்கான மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளித்தலை, திருச்சி, கரூர் உள் ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் தெற்கு மைலாடியில் பேருந்து வசதி இல்லாததால், ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தும், சைக் கிள், இரண்டு சக்கர வாகனங்க ளில் சென்று பேருந்துகளை பிடிக்கச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தெற்கு மைலாடியில் இருந்து மைபுதூர் செல்லும் சாலையில் உள்ள மின் விளக்குகள் அனைத் தும் பழுதடைந்து எரியாமல் உள் ளது. இதனால் பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் மிகவும் அச் சத்துடன் செல்கின்றனர். மேலும் தெற்கு மைலாடியிலி ருந்து வைப்புதல் செல்லும் சாலை மிகவும் மோசமாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, புதிய தார்ச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை வைகைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக் காததை கண்டித்து பல கட்ட போராட் டங்கள் நடத்தப்பட்டன.
மெத்தன மாக செயல்படும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு மைலாடி கிளையின் சார் பில் நவம்பர் 30 அன்று மாலை 6 மணிக்கு மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் நூற்றுக்க ணக்கானோர் பங்கேற்க உள்ள னர். கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் போராட்டங்கள் தொடரும்’’ என்றார். பணிக்கு செல்லும் பெண் ஒரு வர் கூறுகையில், ‘‘வேலைக்கு அதி காலை சென்று, இரவு 8, 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வருகிறோம். சாலையில் உள்ள மின்கம்பங்க ளில் மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாம்புகள் உள்ளிட்ட விஷச் சந்து கள் அதிக அளவில் சாலையில் உலாவி வருவதால் பெரும் அச்சத் துடன் சென்று வருகிறோம்’’ என் றார். பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகள் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் கல்லூரி, பள்ளிக்கு சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை களுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது, இருள் சூழ்ந்து இருப்ப தால் பெரும் அச்சத்துடனே சென்று வருகிறோம்’’ என்றனர்.
சிபிஎம் கண்டனம் சிபிஎம் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன் கூறு கையில், ‘‘மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வைப்பு தூர், அய்யர்மலை, சத்தியமங்க லம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் பல கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், தெற்கு மைலாடி கிராம மக்களின் புதிய தார்ச்சாலை, பேருந்து வசதி, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்றி தர வேண்டும் என பலமுறை மாவட்ட, குளித் தலை ஊராட்சி ஒன்றிய, வைகை நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைமையில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் பல கட்ட போராட்டம் நடத்தியும் அலட்சி யமாக உள்ளனர். இதனை வன்மை யாக கண்டிப்பதுடன், கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் வாலி பர் சங்கம் சார்பில் நடைபெறவுள் ளது’’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குளித்தலை ஒன்றிய செயலா ளர் இரா.முத்துசெல்வன் கூறுகை யில், ‘‘கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்குகள், பொது கழிப்பறைகள் முக்கியமானதாகும். ஆனால், கரூர் மாவட்ட நிர்வா கம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வைகைநல்லூர் ஊராட்சி நிர்வாகம் தங்களது ஊராட்சி எல்லைக்குட்பட்ட பல் வேறு கிராமங்களில் உள்ள அடிப் படை பிரச்சனைகளை நிறைவேற் றாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது’’ என்றார்.