கரூர், மார்ச் 9- சிஐடியு, விவசாயத் தொழிலாளர்கள், விவசாயி கள் சங்கங்களின் கரூர் மாவட்டக்குழுக்கள் சார்பில் ஏப்ரல் 5 அன்று தில்லி நாடா ளுமன்ற நோக்கி நடைபெறும் பேரணியை விளக்கி பிரச் சார நடைபயணம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரு கிறது. இதனொரு பகுதியாக கரூர் மாவட்டம் லாலா பேட்டை கடைவீதியில் துவங்கிய பிரச்சார நடைபய ணம் சிந்தலவாடி, மகாதான புரம், கடைவீதி, கிருஷ்ண ராயபுரம் கடைவீதி வழியாக வந்து, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவல கத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சிஐடியு, விவ சாயத் தொழிலாளர்கள், விவ சாயிகள் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ஜி. ஜீவானந்தம், பி.ராஜூ, கே. சக்திவேல் ஆகியோர் தலை மை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் கா.கந்தசாமி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.