கரூர், மார்ச் 7- கரூர் மாவட்டத்தில் முக்கிய வழித்தடங் களில் மகளிர் பேருந்துகளை இயக்க வேண் டும் என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட 9-ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட 9-ஆவது மாநாடு கரூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.பாண்டிகண்ணன் தலைமை வகித்தார். கா.சிவா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் ச.விஜய மனோகரன் துவக்கி வைத்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பொன் ஜெயராம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வ.கோபி வேலை அறிக்கையையும் மாவட்டப் பொருளாளர் வ.ஸ்டாலின் வரவு- செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கினர். இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஆர். ரமேஷ், மாவட்டச் செயலாளராக வ.கோபி, மாவட்டப் பொரு ளாளராக வ. ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பணி மாறுதலில் ஆசி ரியர் பணி வழங்க வேண்டும். மாவட்டங்க ளில் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட் டார வள மையங்கள் ஆகியவற்றில் பணி புரிந்து வரும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசி ரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு மாதிரி பள்ளிகளில் பணி புரிந்து வரும் அமைச்சுப் பணியாளர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் மகளிர் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது.