districts

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.2 - தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய மோடி அரசின் துரோகத்தைக் கண்டித்து கரூர் மாவட்ட மத்திய, மாநில அனைத்துத் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கே.சக்திவேல், சிஐடியு மாவட்ட செய லாளர் சி.முருகேசன், எல்பிஎப் மாவட்ட செய லாளர் அண்ணவேலு, ஏஐடியுசி மாவட்ட செய லாளர் ஜி.பி.எஸ் வடிவேலன், ஹச்எம்எஸ் சங்க மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ், எல்எல்எப் சங்க மாவட்ட செயலாளர் சுடர்வள வன், டியுசிஐ சங்க மாவட்ட செயலாளர் பாரதி தாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.