districts

img

கடலூரில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி

கடலூர், நவ.21- கடலூரில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை திருவள்ளுவர் மாவட்டம் தட்டிச் சென்றது . தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி கடலூர் புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் தேனி, மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த 10, 12, 14, 18, 19 ஆகிய வயதிற்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் பட்டத்தை திருவள்ளுவர் மாவட்டம் தட்டிச் சென்றது. 2ஆவது இடத்தை கடலூர் மாவட்டமும், 3ஆவது இடத்தை வேலூர்  மாவட்டமும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சபாபதி, மாவட்டச் செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோகன், விளையாட்டு அதிகாரி சிவா, சென் ேஜாசப் கல்லூரி முதல்வர் பிட்டர் ராேஜந்திரன் ஆகியோர் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வழங்கினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.