districts

img

கடலூரில் கடல் சீற்றம்: வீடுகளில் முடங்கிய மீனவர்கள்

கடலூர், மே 12- தெற்கு வங்கக் கடலில் உருவான அசானி தீவிர புயலால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மீனவ கிராமங்களில் கடல்  மிகவும் சீற்றத்துடன் காணப் பட்டது. குறிப்பாக தாழங்குடா பகுதியில் கடல் அலை 20 முதல் 30 அடி உயரத்திற்கு எழுந்தது. இதன் காரணமாக கடற்கரை  பகுதியில் உள்ள சில தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.  தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள சூழலில் தற்போது கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படு வருதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க  செல்லவில்லை. இதனால் கடலூரில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், துறைமுகம் பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீன வர்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். பைபர் படகு மற்றும் கட்டுமர படகுகளும் கடலுக்கு செல்லாததால் அவை அனைத்தும் கரையோரம் பாது காப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாத தால் அவர்கள் தங்கள் வலை களை பின்னும் வேலையி லும் படகுகளை சீர் செய்யும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.