கடலூர், பிப். 11- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 18ஆவது வார்டில் எம்.மணியும், 4 ஆவது வார்டில் ஆர்.எஸ்.ராஜேசும், 10ஆவது வார்டில் எம்.கலாவதியும் சிபிஎம் சார்பில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜ், ஆர்.சிவகாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீ.கிருஷ்ணமூர்த்தி, வீ.மணிவண்ணன், விவசாய சங்க தலைவர் ஆர்.கே.சரவணன், மற்றும் தோழர்கள் எஸ்.குமரவேல், என்.ரவி, விதொச செயலாளர் ஏ.வாசு, வாலிபர் சங்க தோழர்கள் எம்.பாபு, ஆர்.சதீஷ்குமார், பி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.