கடலூர், ஜூன் 16- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த -காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காடாம்புலி யூர் சாலையில் கும்பகோணம் மற்றும் சென்னை செல்வதற்காக ஆயி ரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. இந்த வி.கே.டி சாலை பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர்.
இந்த நிலையில் இப் பகுதியில் வளர்க்கப்படும் நூற்றுக்கணக்கான மாடுகள் நிலப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்று விட்டு காடாம்புலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் ஆங்காங்கே நின்று கொண்டு ஓய்வு எடுத்து வருவதால், போக்குவரத்துக்கு இடையூறவு ஏற்பட்டு வருகிறது. சாலையில் படுத்து கிடக்கும் மாடு கள் ஆரன் அடித்தாலும் விலகாமல் அங்கேயே இருப்பதால், வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்று மாட்டை அப்புறப்படுத்திவிட்டு பின்பு வாகனத்தை இயக்கி செல்லும் நிலை உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்து பயத்தில் அச்சத்துடன் வாகனத்தை இயக்கி வருகின்றனர். மேலும் மாடுகளால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு வதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் மாடுகள் நிற்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாட்டின் உரிமை யாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பரபரப்பாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலையிலே இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.