கடலூர்,ஜன.5- என்எல்சி கேண்டீனில் உண வில் செத்து கிடந்த உணவை சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறு வனத்திலுள்ள இரண்டாவது சுரங்கத்தில் வியாழக்கிழமை (ஜன.5) காலை 6 மணிக்கு நிரந்தரம், ஒப்பந்தம், கூட்டுறவு (சொசைட்டி) தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணிக்கு சென்றுள்ளனர். இரண்டாவது சுரங்கத்திலுள்ள பழைய கேண்டினில், காலை உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். தயிர் சாதமும், வடையும் கொடுத்துள்ளனர். தயிர் சாதத்தில் எலி கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள், கேண்டீன் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில், இதற்கு முன்பு சாப்பிட்டு முடித்த தொழி லாளர்களில் 20-க்கும் மேற்பட் டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் சிலர் கேண்டீன் முன்பு மயங்கி விழுந்தவர்களை உடனடியாக என்எல்சி மருத்துவமனையில் அனு மதித்துள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “கோடிக் கணக்கில் லாபம் ஈட்டும், நெய்வேலி என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்க ளுக்கு தரமான உணவுகள் வழங்க வில்லை” என்று குற்றம் சாட்டினர்.