districts

img

கடலூர் அண்ணா பாலத்தில் விரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

கடலூர், பிப். 20- சென்னையிலிருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான வாக னங்கள் கடலூர் அண்ணா பாலம்சென்று வருகின்றன. இதனால் கடலூர் நகரின் வழியே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கின்றன. இந்த அண்ணா பாலம் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ளது. மேலும் நகரின் முக்கிய இணைப்புப் பாலமாகவும் உள்ளது. இந்நிலையில் பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலம் விரைவில் பாதிப்படையும் நிலையில் உள்ளது. மேலும் பாலத்தில் மேடும் பள்ளம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கிய மாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரத்தையும், சாலையில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களையும் சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.