கடலூர், நவ.13- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் மிக கனமழை பெய்த காரணத்தினால் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது . கடலூர் சுப்புராயலூர்நகர், குப்பன்குளம், தானம் நகர், ஆகிய பகுதிகளில் உள்ள 200 க்கு மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ள னர். பல்வேறு இடங்களில் மழை நீரை மோட்டார் கொண்டு அகற்றி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பல சாலைகளில் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கடலூர் அரசு தலைமை மருத்துவ மனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலை மையில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மழை நீர் வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றனர். மேலும் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ள வாய்க்காலில் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் கடலூர் சிதம்பரம் சாலையில் சிப்காட் அருகே வெள்ளை நீர் செல்வ தால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் கடலூர் பெண்ணையாறு கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சென்று வங்க கடலில் கலக்கிறது.
அதேபோல் குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை நீருடன் என்எல்சி லிருந்து வெளி யேற்றப்படும் நீரும் சேர்ந்து கொண்டு அந்த பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை முழ்கடித்துள்ளது. அதேபோல் பெருமாள் ஏரி, வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் அந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, கீரப்பாளை யம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரி டப்பட்டுள்ள நெற்பயிர்கள், பூஞ்செடிகள், உள்ளிட்டவை மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரண மாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வரு கிறது. இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. எனவே, வீராணம் ஏரி கடந்த மாதமே முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதன் பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழி யாக திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.
எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 47.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஏரிக்கு வரும் உபரிநீரான 2 ஆயிரம் கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது. இதனால் வீராணம் ஏரி கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாது காப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சாலியத்தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராத விளாகம், பின்னத்தூர், தில்லை விடங்கன், வடமூர், தெம்மூர், பரி விளாகம், சிவாயம், பொன்னாந்திட்டு, நாஞ்சனூர், கும ராட்சி, கொளக்குடி, திருநாரையூர், அண்ணாமலை நகர், அண்ணாநகர் உள்பட 30 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளை நிலங்களில் பயிரி டப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவ சாயிகள் சோகத்தில் மூழ்கி யுள்ளனர்.