districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரும் முயற்சி வெற்றி

உடுமலை, டிச.24- மடத்துக்குளம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரும் முயற்சியின் காரணமாக, பொதுப்பாதையில் காவணி அணிந்து சென்று, இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்த மான கோவிலுக்குள் நுழைந்து பட்டியலின மக்கள் வழிபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா, மைவாடி ஊராட்சிக்குட்பட்ட ராஜாவூர் கிராமத்தில் கடந்த டிச.5 ஆம் தேதி யன்று பட்டியலின மக்கள் மீது  வன்கொடுமை தாக்குதல் நடை பெற்றது. இதையடுத்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள், அக்கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். 

அதில் ராஜாவூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பொது வீதி களில் கால்களில் செருப்பு அணிந்து செல்ல முடியாது. அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும் தமிழக அரசின் இந்து  அறநிலையத்துறைக்கு சொந்த மான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடும் உரிமை மறுக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. 

இதுகுறித்து கடந்த டிச.13 ஆம் தேதியன்று, வன்கொடுமை நடத்தி யவர்களை கைது செய்ய வேண்டும். பொது இடங்களில் பட்டி யலின மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடு மலை துணை காவல் கண்காணிப் பாளரிடம் புகாரளிக்கப்பட்டது. மேலும். இதே கோரிக்கையை வலி யுறுத்தி கடந்த டிச.18 ஆம் தேதி யன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தரப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டிச. 24  ஆம் தேதி (ஞாயிறன்று) உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி காரிகள் அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்ற உரிய நட வடிக்கை எடுக்கும் என்று உறுதி மொழி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவில் வழிபட வும், பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு  செய்து, அதனை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் தலைமையில், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து சென்றனர். இதன்பின் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட்டனர்.

முன்னதாக, இந்த சமூக மாற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகாச் செயலாளர் ஆர்.வி.வடி வேல், சிஐடியு நிர்வாகி பன்னீர்செல்வம் மற்றும் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தபெதிக, ஆதித்தமிழர் ஜன நாயக பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதி தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.