ஈரோடு, மே 15- ஈரோட்டில், தடை செய்யப்பட்ட லாட்டரியில் பணம் இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு அருகே எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் கமிசன் நூல் ஏஜண்டாக செயல்பட்டார். அதிலும் போதுமான வரு வாய் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், லாட்டரி வாங்கியுள்ளார். தடையை மீறி நடைபெறும் லாட்டரி விற் பனையில் அவ்வப்போது விழும் பரிசுகளால் தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்துள்ளார். இதையடுத்து, லாட்டரியில் லட்சக்கணக்கில் பணம் இழந்ததால் மனமுடைந்து தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மாலதி (54) என்ற மனைவியும், திவ்யபாரதி, நித்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். முன்னதாக, அவர் வெளியிட்ட வீடி யோவில் தனது சாவிற்கு காரணம் கருங்கல் பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் கார ணம். இனிமேலும் உயிருடன் இருந்தால் இதற்கு மேலும் அடிமை ஆகி விடுவேன். லாட்டரியில் கிட்டதட்ட ரூ.62 லட்சம் இழந்து விட்டேன். என் குடும்பத்திற்கு நட்ட ஈடாக ரூ.30 லட்சம் வாங்கி கொடுத்து விடுங்கள். லாட்டரி சீட்டை எப் படியாவது ஒழித்து விடுங்கள். நான் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொள்கிறேன் என அந்த வீடியோவில் பதிவிட்டு ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். பின்னர், இது குறித்து ராதாகிருஷ்ணன் மனைவி மாலதி காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.