அரியலூர், டிச.28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்து வர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் சங்க கலந்தாய்வு கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநி லத் தலைவர் நடேசன், பொதுச் செயலாளர் ராஜன், பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக நாகராஜன், செய லாளராக வேல்முருகன், பொருளாளர் முரு கேசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மருத்துவ சமுதாயத்திற்கு பழங்குடி இனப் பிரிவு அல்லது தனி உள் ஒதுக்கீட்டில் 5 சதவீதம் வழங்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முடி திருத்தும்தொழி லாளர் நலவாரியத்திற்கு தலைவரை நியமனம் செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் குடியிருக்க வீடு இல்லாமல் உள்ள தங்கள் சமுதாயத்தினருக்கு அரசு மூலமாக வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.