court

img

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்பு

சென்னை,பிப்.27- சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் திங்களன்று (பிப்.27) பதவியேற்றுக் கொண்டார். இதை யடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத் திலுள்ள கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சி யில், அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட லட்சுமி நாராயணனை, தமிழ்நாடு அரசின்  தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்த ரம், பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர் கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், “சட்டம்  படிக்கத் தொடங்கியபோது தந்தை  இறந்து விட்டதால், எனது அம்மா தான் என்னைப் படிக்கவைத்து ஆளாக் கினார். நீதிபதியாக பொறுப்பேற்றது சாதனையைவிட மேலானது” என்றார். நீதிபதி வி.லட்சுமி நாராயணனு டன் சேர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப் பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 1970 ஆம் ஆண்டு அக்டோ பர் 4 ஆம் தேதி பிறந்தவர் லட்சுமி நாரா யணன். புரசைவாக்கம் எம்.சி டி.முத் தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளி யில் பள்ளிப்படிப்பும், வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார்.  பெங்களூருவிலுள்ள தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு வழக்கறி ஞராக பதிவு செய்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானது டன், சட்டம் பற்றி 350 கட்டுரைகளை யும் எழுதியுள்ளார்.