புதுதில்லி, மே 2- தி கேரளா ஸ்டோரி திரைப்படத் திற்குத் தடை விதிக்கக் கோரும் விவகாரத்தில், மனுதாரர்கள் முத லில் உயர்நீதிமன்றத்தை அணுகு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன் னோட்டம் அண்மையில் வெளி யானது. அதில், கேரளத்தைச் சேர்ந்த 4 பெண்கள், கல்லூரி விடுதி யில் ஒரே அறையில் தங்குவதாக வும், அவர்களில் முஸ்லிமாக இருக்கும் ஒரு பெண், மற்றவர் களை மூளைச் சலவை செய்து, முஸ்லிமாக மதமாற்றம் செய்வ தாகவும், பின்னர் அவர்கள் அனை வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாக வும் காட்சிகள் அமைக்கப்பட்டி ருந்தன.
அதுமட்டுமல்லாமல், கேர ளத்தைச் சேர்ந்த 32 ஆயிரம்பெண் கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க் கப்பட்டதாகவும் ‘தி கேரளா ஸ்டோரி’ முன்னோட்டத்தில் கூறப் பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மே 5-ஆம் தேதி வெளி யாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துகிறோம் என்ற பெய ரில், இந்தப் படம் ஒட்டுமொத்த கேரள மக்களையும் இழிவுபடுத்து வதாகவும், இஸ்லாமியர்கள் என்றாலே அவர்களை பயங்கர வாதிகளாக சித்தரிப்பதாகவும் கண்டனங்கள் எழுந்தன. “மதச்சார்பின்மையை அடிப்ப டையாக கொண்ட கேரளாவை மதத் தீவிரவாதத்தின் மையமாக காட்டும் வகையில் சங்-பரிவாரின் பிரச்சாரமாக இந்த படம் உள்ளது” என்றும், “இதில் கூறப்பட்ட அனைத் தும் பொய்யான தகவல்” எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டினார்.
அதேபோல், கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான விடி சதீஷனும், “கேரள ஸ்டோரி படத் திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. 32 ஆயிரம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய தாக இந்த படம் தவறுதலாக சித்த ரித்து கூறுகிறது. படம் என்ன சொல்ல வருகிறது என்பதை தெளி வாக டிரெய்லர் காட்டுகிறது. எனவே படத்தை திரையிட அனு மதிக்கக் கூடாது” என்று கூறி னார். கேரளத்தைச் சேர்ந்த வழக்கறி ஞரும் நடிகருமான ஷுக்கூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதி வில், “தி கேரளா ஸ்டோரி முன் னோட்டத்தில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக கூறப்பட்டி ருக்கிறது. இதில் 32 பெண்கள் நாடு கடத்தப்பட்டதை நிரூபித்தால் கூட ரூ. 11 லட்சம் பரிசாக வழங்கு வேன்’’ என்று அறிவித்தார். “நாங்கள் ஒரு சவாலை முன் வைக்கிறோம். நாடு கடத்தப்பட்ட தாக கூறப்படும் பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அவ்வாறு நிரூ பிக்கும் நபருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். எங்களது மாவட்ட அலுவலகங்களில் மே 4-ம் தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் உண்மைத்தன்மையை நிரூபித்து பரிசை பெற்றுச் செல்லலாம்” என்று இளைஞர் முஸ்லிம் லீக்கும் அறிவித்தது.
இதனிடையே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. வெறுப்புப் பேச்சு தொடர்பான மனுக்களோடு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு, நீதிபதி கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அடங் கிய அமர்வில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆகி யோர் ஆஜராகி வாதாடினர். அப் போது, மே 5 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் மிகவும் மோசமான வெறுப்பு பேச்சுக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த முன்னோட்டம் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்று எடுத்துரைத்தனர். எனினும், ‘படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதால் முத லில் உரிய உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அறி வுறுத்திய நீதிபதி கே.எம். ஜோசப், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் அறி வுறுத்தி, படத்திற்குத் தடை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.