court

img

உச்சநீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு!

புதுதில்லி,அக்டோபர்.17- உச்சநீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பழைய நீதி தேவதையின் சிலையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எந்த பாரபட்சமும் பார்க்கக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்ட நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டு, அநீதியைத் தண்டிப்பதற்காகக் கையில் வாளுடன் இருக்கும்
ஆனால் தற்போது உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திறந்து வைத்துள்ள சிலையானது திறந்த கண்களுடன், நெற்றியில் திலகம், கழுத்து முழுவதும் நகைகள் மற்றும் கையில் அரசியல் சாசனப் புத்தகத்தை ஏந்தியபடி உள்ளது.