புதுதில்லி, டிச. 6 - கூடுதல் வருவாய்க்காக தானும் ‘மூன்லைட்டிங்’ செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கூடுதல் வருவாய்க்காக வேறு ஒரு நிறுவனத்தி லும் கூடுதலாக வேலை செய்வது ‘மூன் லைட்டிங்’ (Moonlighting) எனப்படு கிறது. இதுபோன்ற இரண்டாவது மற்றும் கூடுதல் வேலைகளை, பெரும் பாலும் இரவு நேரங்களிலேயே செய்வ தால், நிலவு வெளிச்சத்தை குறிப்பிடும் வகையில், இதனை ‘மூன்லைட்டிங்’ என்கிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக ‘மூன்லைட்டிங்’ ஒரு விவாதப் பொரு ளாக மாறியிருக்கிறது. முதலில் ஐடி துறையில் விவாதமாக கிளம்பிய ‘மூன் லைட்டிங்’, பின்னர் மற்ற துறைகளி லும் விவாதமானது. சமீபத்தில் கூட முன்னணி ஐடி நிறுவனமான ‘விப்ரோ’ (Wipro) ‘மூன்லைட்டிங்’கில் ஈடுபட்ட சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. “மூன்லைட்டிங் செய்வது பணி ஒப்பந்தத்திற்கு எதிரானது” என விப்ரோ தெரிவித்தது. இதேபோல ‘டிசிஎஸ்’, ‘இன்போசிஸ்’, ‘எச்சிஎல்’ உள்ளிட்ட ஐடி நிறுவனங்களும் ‘மூன் லைட்டிங்’கிற்கு எதிர்ப்பு தெரி வித்தன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட டி.ஒய். சந்திரசூட், இளமைக் காலத்தில் தானும் மூன்லைட்டிங் செய்துள்ளதாக கூறியுள்ளார். மாநாடு ஒன்றில் பேசு கையில் இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். “பல பேருக்கு இதைப் பற்றித் தெரி யாது. ஆனால், எனது 20 வயதுகளில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அகில இந்திய வானொலி யில் ரேடியோ ஜாக்கியாக ‘மூன் லைட்டிங்’ (யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூடுதலாக வேறு ஒரு வேலை) செய்துள்ளேன். அப்போது ‘ப்ளே இட் கூல்’ (Play it Cool), ‘டேட் வித் யூ’ (Date with You), ‘சண்டே ரிக் வெஸ்ட்’ (Sunday Request) போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து அளித் துள்ளேன். அந்த வகையில், இசை மீதான எனது அன்பு இன்றும் தொடர்கிறது. வழக்கறிஞர்கள் வழக்காடுவதை தினசரி இசையாக கேட்டு முடித்த பிறகு, நான் திரும்பிச் சென்று, என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் இசையைக் கேட்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.