சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, சிறார் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும், சேமித்து வைப்பதும் போக்சோ மற்றும் ஐ.டி சட்டங்களுக்கு கீழ் குற்றமல்ல என கூறி, சிறார் ஆபாசப் படத்தை பார்த்த நபரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற நீநிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பு சட்டத்திற்கு எதிரானது, இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் எச்எஸ் பூல்கா உச்சநீதிமன்றம் மனுக்களை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீநிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்தனர். சிறார் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும், சேமித்து வைப்பதும் போக்சோ மற்றும் ஐ.டி சட்டங்களுக்கு கீழ் குற்றமே என்று தீர்ப்பை வழங்கினர்.
மேலும், ‘சிறார் ஆபாச படங்கள்’ என்பதை தவிர்த்து ‘சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம்’ என குறிப்பிடும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.