court

img

மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு
கல்வி நிறுவனங்களிலும் , பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க ஒன்றிய ரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 இவ்வாறு உத்தரவிட்டால் பெண்களை வேலைக்கு எடுப்பதில் அது தயக்கத்தை  ஏற்படுத்தலாம் என சட்ட மாணவர் ஒருவர் மனு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த விவகாரம் பல்வேறு பரிமாணங்களை கொண்டிருக்கிறது  என அவர் குறிப்பிட்டார். 
இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது 
மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டால் வருங்காலத்தில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறைய வாய்புள்ளது 
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மனுதாரர் அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.