அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து இவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது. இவ்வழக்குகளில் குற்றச்சாட்டை பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் 11 ஆம் தேதி இரு அமைச்சர்களும் நேரில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.