ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை தடை செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கோரிய மனு மீதான வழக்கு உச்சநீமன்றத்தில் இன்று விராணைக்கு வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த கே.எம்.ஜோசப் தலைமயிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு. தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கும் அவசரச் சட்டத்துக்குத் தடை விதிக்க கோரிய பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் எனவும் தீப்பளித்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது:
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழக அரசின் சட்டத்திருத்தம் சரி செய்துள்ளது எனவும்
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது எனவும்
போட்டிகளில் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டின் சட்டம் உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.