court

img

சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், இடைப்பட்ட காலத்தில் சி.வி.சண்முகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.