court

img

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கிடையாது... தமிழக அரசு...

புதுதில்லி:
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தர முடியாது என்றுஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம்நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை தீவிரமடைந்த நிலையில், அதே ஆண்டு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட் டது.
இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் எனசென்னை உயர் நீதிமன்றம் கடந்தஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தங்கள் தரப்பு விளக்கம் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக் கூடாது என்று தமிழக அரசுசார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண் டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு நவம்பர்16 திங்களன்று, நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது தமிழக அரசு சார்பில் மூத்தவழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ”மாநில அரசுஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தான் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது” என்று வாதிட்டார்.இதையடுத்து வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,“ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டிற்கான பல்வேறு நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள் ளன. 3 மாத சோதனை அடிப்படையில் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆலையை இடைக்காலமாகத் திறக்க அனுமதி கோரக் கூட அந்நிறுவனத்துக்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது என்று தெரிவிக்கப் பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள் இவ்வழக்கில் ஸ்டெர்லைட் நிர்வாகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.