உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் வரும் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவர் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், வரும் நவம்பர் 9-ஆம் தேதி இந்தியாவின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பொறுப்பேற்க உள்ளார்.