சென்னை, மார்ச் 28- சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்து ரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடு தல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் திங்களன்று(மார்ச் 28) நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிக ளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறி ஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறி ஞர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். அவற்றிற்கு நீதிபதிகள் மாலா மற்றும் சௌந்தர் ஆகியோர் ஏற்புரையாற்றி னர். நீதிபதி என். மாலா பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள செயின்ட் ஜான்ஸ் மற்றும் கேசரி பள்ளிகளில் படித்தவர் சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து, 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதவி செய்து, 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்து வருகிறார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பை முடித்து, 1993ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவு ரையாளராக இருந்தவர் சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தி லும், சில வழக்குகளில் நீதிமன்றத்தி ற்கு உதவும் நபராகவும் இருந்துள் ளார் இளநிலை சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு நீதித்துறை பயிற்சி மையத்தில் வகுப்புகளைஎடுத்த அனுபவம் கொண்டவர்.