court

img

நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக, ஒரு அமர்வு முழுதும் பெண் நீதிபதிகள்

கொச்சி, மார்ச் 9- இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக கேரள  உயர்நீதிமன்றத்தின் ஒரு அமர்வு முழுவதும் பெண்களால் நடத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தில் நீதிபதிகள் அனுசிவராமன், வி. ஷெர்சி, எம்ஆர் அனிதா ஆகியோர் முழு அமர்வின் உறுப்பினர்களாக இருந்தனர். முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு குருவாயூர் தேவசம் போர்டு நன்கொடை அளித்தது தொடர்பான வழக்கை இந்த அமர்வு விசாரித்தது. நன்கொடை வழங்குவதற்கான வழிமுறைகள் இல்லை என்கிற உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய  அரசின் மனுவை நீதிபதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட னர். இந்த வழக்கில் அரசு தரப்பில் பெண் சிறப்பு வழக்கறி ஞர் ஸ்ரீலதா ஆஜரானார். நீதிமன்ற அதிகாரி முதல் இதர ஊழி யர்கள் வரை முற்றிலும் பெண்களே நிரம்பியிருந்தனர்.