court

img

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

நில மோசடியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனை, கடந்த ஜூன் 28 அன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதை தொடர்ந்து  ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.
ஹேமந்த் சோரன் வழக்கில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.