உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல்
புதுதில்லி, ஏப்.17- உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலை மையிலான 6 ஆண்டு பாஜக ஆட்சியில் 183 பேர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து வல்லுநர் குழு அமைத்து விசா ரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே அங்கு என்கவுண்ட்டர் பெயரி லான படுகொலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இதுவரை 1038 என்கவுண்ட் டர் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டதில், 183 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர 238 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளனர். 2017 மார்ச் துவங்கி தற்போது வரை உ.பி. மாநிலத்தில் 10 ஆயிரத்து 900-க்கும் மேற் பட்ட அதிதீவிர போலீஸ் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதில், இதில் 23 ஆயிரத்து 300 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்,
5 ஆயி ரத்து 46 பேர் காயமடைந்தனர் என்பது காவல் துறையின் கணக்கு. காவல்துறைத் தரப்பில் எடுத்துக் கொண்டால், இந்த என்கவுண்ட் டர்களின் போது, காவல்துறையினர் 1,443 பேர் காயம் அடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்த னர். இவர்களில் 8 பேர், விகாஸ் துபே என்ற ரவுடிக் கும்பலால் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட வர்கள் ஆவார்கள். எனினும் என்கவுண்ட்டர்கள் நின்ற பாடில்லை. கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மட்டும் 6 பேரின் உயிர் பறிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேர், ஜான்சி நகரில் கடந்த வாரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான பரபரப்பு அடங்கு வதற்கு உள்ளேயே முன்னாள் எம்.பி. அத்திக் அகமது, அத்திக் சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரும், நீதிமன்றத்திலிருந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு படுகொலை, காவல்துறை யினரால் செய்யப்படாவிட்டாலும், காவல் துறையினரின் பாதுகாப்புடன், பத்திரிகை யாளர்கள் அனைவரின் முன்னிலையில், இந் துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட் டுள்ளது. மொத்தம் 36 ரவுண்டுகள் சுடப்படும் வரை போலீசார் வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டு களில் 183 என்கவுண்ட்டர் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த என்கவுண்ட் டர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, அத்திக் அகமது மற்றும் அவ ரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரின் கொலை குறித்தும் விசாரிக்கவும் விஷால் திவாரி வலியுறுத்தியுள்ளார்.