ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி கிண்டலாக பேசினார்.
இதனால் கோபமடைந்து வில் ஸ்மித், மேடைலேயே தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் அறைந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும், தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆஸ்கர் அகாடமி அளித்த விளக்கத்தில், கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். இவர் தனது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.