cinema

img

நீட் பாதிப்பு:  நீதிபதி குழுவிடம் முறையிட நடிகர் சூர்யா வலியுறுத்தல்...

சென்னை:
நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை, நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் ஜூன் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், அகரம் அறக் கட்டளை நிறுவனருமான சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தகுதியை தீர்மானிக்க ஒரே ஒரு தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு ஜூன் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

;