cinema

img

பா.இரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ்

சென்னை, ஜன.28-
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரோடெக்ஷன் தயாரிக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படம் பெரும் பாராட்டுகளை வாங்கி குவித்தது.
இதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'கர்ணன்' என்ற திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரோடெக்ஷன் தயாரிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

;