cinema

img

இப்போது ரகுவரன் இருந்திருந்தால்... - சோழ. நாகராஜன்

கடந்த 2008 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம் 19 அன்றுதான் பிரபல திரைநட்சத்திரம் ரகுவரன் மரணத்தைத் தழுவினார். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்நிலையில் அவரின் நினைவுநாளையொட்டிய தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவொன்றைப் போட்டிருக்கிறார் அவரது முன்னாள் இணையர் திரைக்கலைஞர் ரோகிணி.  அதில், மார்ச் 19, 2008 எப்போதும்போல ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால், எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் அது மாற்றியது. ரகு இப்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் காலகட்டத்தை அவர் மிகவும் நேசித்திருப்பார். ஒரு நடிகராக அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

;