தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்துகிறது
சென்னை, மே 15- மே 22 மதுரையில் அயோத்தி படக் குழுவினருக்கு பாராட்டு விழாவை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்துகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ் ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையான வாழ்க்கை முறையை சிதைக்கும் நோக்கோடு சிறுபான்மை மக்களை தீவிரவாதிகளாக, எதிரி களாக போலியாக சித்தரித்து மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்துத்துவா சக்திகளின் கேரளா ஸ்டோரி படத்தை புறக்கணிப்போம். மக்கள் ஒற்றுமையை, மனிதநேய த்தை உயர்த்திப் பிடிக்கும் அயோத்தி போன்ற படங்களை கொண்டாடு வோம். முன்னெடுப்போம். இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் அந்த மக்களின் அபிலாசை களை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அங்கு வாழ்கிற பல்வேறு மக்கள் பகுதியினரிடம் பிரிவினையை உரு வாக்கும் நோக்கத்தோடு ‘காஷ்மீர் பைல்’ என்ற திரைப்படத்தை முன்னி றுத்தி மதவெறி பிடித்த இந்துத்துவா சக்திகளான ஆர்எஸ்எஸ்- பாஜகவும், இந்திய பிரதமர் உள்ளிட்டோர் தூக்கிப் பிடித்து, பொய்யான செய்திகளை உண் மையாக்க எத்தனித்து தோல்வியுற்றனர்.
கலையும், இலக்கியமும் ஒரு நாட்டின் நாகரீகத்தை மேம்படுத்துவ தாக, முன்னேற்றுவதாக அமைய வேண்டும். அதற்கு மாறாக இந்திய அரசியலின் தீய சக்தியாக இருக்கிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் பிற்போக்கு செயல்களை கண்டித்து உலகமே எள்ளி நகையாடியது. இந்த அசிங்கத்திற்கு பின்னும் இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் அமைதி பள்ளத்தாக்காக விளங்கும் கேரள மண்ணில் இஸ்லாமியர்கள் திட்ட மிட்டு பயங்கரவாதிகளை உருவாக்கு வதற்காக மதமாற்றம் செய்வதாக, பொய்யான, தவறான, கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத கற்பனை களைக் கொண்ட செய்திகளை முன்வைத்து ‘கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் ஒரு படத்தை எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அரசு அதி காரம், தணிக்கைத்துறை என அரசு கட்டமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பொய்யையும், புனைவை யும் தனது அரசியலுக்கு பயன்படுத் தும் தவறான வழிமுறையை ஒன்றிய பாஜக அரசும், இந்துத்துவா சக்தி களும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த படத்தில் சொல்லப்படுகிற அனைத்து புள்ளி விவரங்களும், தகவல்களும் தவறானது என்று இந்தியாவே கூக்குரல் இட்டபோதும் பொது மேடையில் இந்த படத்தை பாராட்டி பேசுகிற ஒரு பிரதமரை இந்தியா பெற்றிருப்பது துரதிர்ஷ்ட வசமானது. இது போன்ற படங்கள் மூலமாக இந்திய மக்கள் மத்தியில் அழிக்க முடியாமல் இருக்கிற மக்கள் ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை, மனிதநேயத்தை, சகோதரத்துவத்தை சிதைப்பதற்கு எடுக்கப்படுகிற முயற்சிகளுக்கு எதிராக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இது போன்ற திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.
இன்றைய ஒன்றிய அரசாங்கம் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதா யம் தேட வேண்டும் என முயற்சிக்கிற போது இந்த காஷ்மீர் பைல்களையும், கேரளா ஸ்டோரிகளையும் மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. இந்துத்துவ மதவெறி சக்திகளின் இது போன்ற செயல்களுக்கு பதிலடியாக முன்னெடுக்கப்படுகிற கலை இலக்கிய திரைப்படங்களை உயர்த்திப் பிடித்து தீய சக்திகளிட மிருந்து நாட்டை பாதுகாக்க அனை வரும் முன்வர வேண்டும். இந்த நல்ல நோக்கத்தோடு சமீபத்தில் தமிழ் திரையுலகில் வெளிவந்த மனித நேயத்தை, மத நல்லிணக்கத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு தமிழ் பரப்பில் பெரும் மக்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிற ‘அயோத்தி’ திரைப்படக் குழுவை பாராட்டுவது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு முடிவெடுத்திருக்கிறது. வரும் மே 22 அன்று மாலை மதுரை யில் மத நல்லிணக்கத்தை, மனித நேயத்தை முன்வைக்கிற அயோத்தி படக்குழுவினர்களுக்கான பாராட்டு, இந்துத்துவா மதவெறி சக்திகளின் காஷ்மீர் பைல்களுக்கும், கேரளா ஸ்டோரிகளுக்கும் பதிலடியாக அமை யும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுதியாக நம்புகிறது. இதுபோன்ற முன்னெடுப்பு களுக்கு ஜனநாயக எண்ணம் கொண்ட அமைப்புகளும், நண்பர்களும், நல்லிணக்கத்தில் பற்று கொண்ட சகல பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.