படம் வெளிவந்து சில காலம் சென்ற பின் அதன் கதையை எழுதிய திரைக்கதாசிரியரிடம் அந்த இயக்குநர் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தாராம்: “இந்தப் படத்தின் பெயர் பூலோக ரம்பை இல்லை... அந்த சொர்க்கத்து நடனக்காரி யை பூலோக ரம்பா என்று அழைப்பதுதான் சரி...” அந்த இயக்குநர் பி.என்.ராவ். தமிழ் மொழியின் தன்மைக்கேற்ப ரம்பா என்பது ரம்பை என்றுதான் ஆகும். கங்கா கங்கை யாகவும், யமுனா யமுனையாகவும், சீதா சீதையாகவும் தமிழ் இலக்கணமுறைப்படி மாறுமென்பதை அவர் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் தமிழ்நாட்டுக்காரர் இல்லை. பி.என்.ராவ் முதலில் இயக்கியது ரம்பை யின் காதல். ஒரு தற்செயல் முரண்சுவை பாருங்கள். அந்தப் படத்தின் பெயரிலும் ரம்பையே இருந்திருக்கிறது.
1939-இல் வெளிவந்த அந்தப் படத்தின் நாயகி கே.எல்.வி. வசந்தா. அழகும் நல்ல குரல் வளமும் கொண்டவராக இருந்தார் வசந்தா. எச்.எஸ்.மேத்தா இயக்கத்தில் கோவை பிரீமியர் சினிடோன் நிறுவனம் தயாரித்த ஸ்ரீகந்த லீலா (1938) என்ற படத்தில்தான் முதன்முதலில் அறிமுக மானார் வசந்தா. ரம்பையின் காதல் வெளிவந்த போது விண்ணுலக அழகி ரம்பை கே.எல்.வி. வசந்தாபோலத்தான் இருந்திருப்பாள் என்று திரைவிமரிசகர்கள் எழுதினார்களாம். அவரை மறுபடியும் ரம்பையாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்ற பூலோக ரம்பையிலும் அவரையே நடிக்கவைத்தார் கள். திருப்பங்கள் நிறைந்த நாட்டுப்புறக் கதை தான் அந்த பூலோக ரம்பை. இளவரசன் ஒருவன் பூலோக ரம்பையைக் காதலிப்பது, ரகசியத் திருமணம் செய்து கொள்வது என்று கதை செல்லும். சிசுவைப் பலிதர முயல்வது, அது தடுக்கப்படு வது, எதிர்காலத்தை உரைக்கும் பேசும் பறவை என்றெல்லாம் விறுவிறுப்பும், திருப்பங்களும், அதிசயங்களும் நிறைந்திருந்தது இந்தத் திரைப்படத்தில். ஜூபிடர் சோமுவும் எம்.டி.விஸ்வநாதனும் இணைந்து கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ வில் சேலம் சண்முகா பிலிம்ஸ் மற்றும் விஜயா மாருதி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுக் காகத் தயாரித்த படம். படம் பாதி உரு வாகியிருந்தபோது கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டது. படப்பிடிப்பு நின்றுபோனது. அப்போது தான் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் பட விநி யோகத்தை ஒரு தொழிலாக மேற்கொள்ளும் முயற்சியிலிருந்தார். புதிய படங்களைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு பாதியில் நிற்கும் பூலோக ரம்பையின் நிலைமை தெரிய வந்தது. அதன் இயக்குநர் பி.என்.ராவைச் சந்தித்தார் வாசன்.
படத்திற்கு நிதி உதவி செய்தால் எதிர்வரும் தீபாவளிக்குப் படத்தை முடித்துத்தர இயலுமா என்று கேட்டார். அத்துடன் அந்த இயக்குநருக்கு இன்னொரு உறுதியையும் தந்தார் வாசன். தான் சென்னையில் துவங்கப் போகும் ஜெமினி ஸ்டூடியோ சார்பில் தயாரிக்கப்போகிற முதல் சினிமாவை இயக்கும் வாய்ப்பையும் ராவுக்குத் தருவ தாகச் சொன்னார். அது ஏற்கப்பட்டு, வாசனின் நிதி உதவியால் படம் குறிப்பிட்ட காலத்துக்குள் உருவானது. வாசனும் உறுதி யளித்ததுபோலவே பி.என்.ராவுக்கு இயக்கு நர் வாய்ப்பளித்து ஜெமினியின் முதல் பட மான மதன காமராஜன் (1941) படமும் வெளி வந்தது. பூலோக ரம்பை, மதன காமராஜன் இரண்டும் அப்போது பிரபலமாக அறியப் பட்டிருந்த நாடகாசிரியர் பி.எஸ்.ராமையா வின் எழுத்தில் உருவானவை. மதன காம ராஜனிலும் வசந்தாவையே நடிக்கவைத்தார் வாசன். அதன் தொடர்ச்சியாக அவரது கனவு சினிமாவான சந்திரலேகா எனும் பிரம்மாண்டப் படத்திலும் வசந்தாவையே ஒப்பந்தம் செய்தார். ஆனால், சந்திரலேகா விலிருந்து வசந்தா விலகிப்போக, வாய்ப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்குப்போய் அது அவரது புகழ் மகுடத்தில் மற்றொரு வைரமென பதியப்பெற்றது.
அந்த நாட்களில் தென்னிந்தியா முழு வதும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ரசிகர் களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. டப்பிங் அல்லது சப் டைட்டில் போன்ற ஏற்பாடு கள் எதுவுமில்லாமல் தமிழ்ப் படங்கள் தமிழிலேயே ஓடின. தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பேசும் ரசிகர்களுக்கு மொழி ஒரு தடையே இல்லாமல் தமிழ்ப் படங்களை அவர்கள் ஆர்வத்தோடு கண்டு களித்தார்கள். தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்திலும் ஒரு பெயர் வைக்கமட்டும் நேர்ந்தது. நாம் இருவர் என்றால் We two என்றும் சுவரொட்டிகளில் இருக்கும். குமாஸ்தாவின் மகள் என்கிற படத்திற்கு Clerk’s daughter என்று போட்டுவிடு வார்கள். அவ்வளவுதான். தமிழறியாத பகுதி களிலும் படத்தின் வசூல் உறுதியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் பெயரை ஆங்கிலத்திலும் Bhooloka Ramba என்றே போட்டிருந்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் இல்லாமல் அப்போது சினிமாவே இல்லை என்ற நிலை. அந்த ஜோடி தனது நகைச்சுவையாலும் பாடல்களாலும் இந்த பூலோக ரம்பையின் வெற்றிக்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தார்கள். இவ்வளவும் சேர்ந்து படத்தின் வெற்றியை உறுதி செய்தது. அதன் விளைவாக வாசன் என்கிற விநியோகஸ்தர் உதயமாகி, சினிமா வணிகத்துக்கு உத்வேகமூட்டி, தானும் வளர்ந்தார்.